Showing posts with label பயம். Show all posts
Showing posts with label பயம். Show all posts

Tuesday, October 2, 2012

மன நோய்கள்

 
 
மனம்
மனம் என்னும் உணர்வு உடல் தரும்  உணர்வு நிலை நாம் அனைவரும் உணர்ந்ததே.
மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
ஆனால் இந்த மனம் என்பது நம்முடைய உடல்களில் பெரியது என்பது நாம் அறியாத ஒன்று .மனம் என்னும் உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது  . சூட்சும அணுக்களால் ஆனது .
ஆனால் முளை  என்ற உறுப்பு இதற்கு தொடர்புடையது என்பது நமக்கு தெரியும் . இந்த முளை நம் மனதின் இருப்பிடம் என்றும்     மனம் என்னும் உடலின் hardware என்று தற்போது நினைத்துக்கொள்ளலாம் .மனம் என்பது ஆன்மாவின் நுண்ணிய கருவி என்று பிராணிக் ஹீலிங் மாஸ்டர் சோவா கோக் சூயி தன் புத்தகங்களில் எழுதியுள்ளார் .இந்த மனம் வயிற்ருப்பகுதியில் மையம் கொண்டு 12  அடி  விட்டம் கொண்ட பந்து போல நம்மை சூழ்ந்து உள்ளது. 
எண்ணங்கள் மனதில் உருவாகும் சக்தி வடிவங்கள் .மனம் 2  பகுதிகளாக பிரிக்கப்படுகிறது .மன  ஆராய்ச்சியாளர்கள் அதை உணர்வு மனம் ,ஆழ்      உணர்வு மனம்  என்று சொல்கின்றனர் .10 % உணர்வு மனம் ,90 % ஆழ் உணர்வு மனம்  .ஆழ் மனதில் தேங்கி இருக்கும் பல எண்ணங்கள் ஒருவருடைய குணமாகவும், ஆற்றலாகவும் ,நோயாகவும் ,பலமாகவும் ,பலவீனமாகவும் வெளிப்படும் . இதன்  தன்மை  கொண்டே ஒருவருடைய  வாழ்க்கை  நிர்ணயிக்கப்படுகிறது  என்பது உண்மை .
மனதில் உண்டாகும் எதிர்மறையான எண்ணங்கள் நம் ஒளி உடலில் சக்தி எடுக்கும் தன்மையை மாற்றி விடுகின்றன . சக்கரங்கள் முலம்   உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் எனர்ஜி  குறைந்து    நோய் உருவாக காரணமாய் அமைகிறது    .     
சொரியாசிஸ் ,அரிப்பு ,ஆஸ்த்துமா ,தண்ணீர் பயம் ,ஆகாய விமானத்தில் பறக்க பயம் ,உயரமான இடத்தல் இருந்து கீழே பார்க்க பயம்,பாம்பு ,நாய் ,பூனை,புழு ,இரத்தம் பார்க்க பயம் ,தனியாக  அறையில்  இருக்க பயம் ,,மரண பயம் இப்படி பலவித காரணமற்ற பயங்கள்.
அதிக உடல் பருமன் உண்டாக ,ஏதோ நோய் இருப்பது போன்று நினைத்து பல மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுவது ,தூக்கமின்மை ,ஆண்மை இல்லாமை ,உடலுறவு செய்ய முடியாது என்று நினைப்பது, குழந்தை பிறக்காது என்று கவலை பட்டு மன அழுத்தம் அடைவது ,யாரோ தன்னை பார்ப்பது, பேசுவது , குறை சொல்வது, திட்டுவது போல உணர்வது போன்ற பல இந்த மனதில் உண்டாகும் பாதிப்பான ,இணக்கமற்ற எண்ணங்களால் உண்டாகின்றன .             
   . மனதில் உருவாகும் எதிர்மறையான   எண்ணங்கள் குறைய  யோகா ,தியானம் போன்றவை உதவும். இதுவே மனதில் ஆழமாக பதிந்து மன அழுத்தத்தை உருவாக்கும் பொழுது பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோதெரபி சிகிச்சைகள் உதவியாக இருக்கும்.
இப்படி ஆராயும் பொழுது நம் வாழ்வில் உண்டாகும் எந்த தவிப்புக்கும்,நோய்க்கும்,பலவீனத்துக்கும் ,பத்துக்கும்,சுகமின்மைக்கும் ,கவலைக்கும்  ,   படிப்பு,  ஜாபகம் , மனப்பாடம்  செய்யும்  திறமை, தைரியமாக செயல்கள் செய்ய , உறவுகள் மேம்பட ,சகஜமாக வாழ ,கூச்சமின்றி  மக்களுடன் பழக  இப்படி எதற்குமே ,எல்லாவற்றிற்குமே தீர்வு இந்த மனம் சார்ந்த்த சிகிச்சைகள் .      
இப்படி மனிதனின் ஆரோகியத்துக்கு 3 உடல்களின் தன்மையை ஆராய்ந்தது தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் .இதை விடுத்து அனைத்துக்கும்  ஒரு   முறையான   மருத்துவம் சிறப்பு என்று நினைத்து நாட்களை வீணாக்கி உடல் நலனை தொலைத்து நோயில் மடிவதை   இனி கை  விட வேண்டும் .நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான சூட்சும சிகிச்சைகள் , ஆன்மிக அறிவு இவற்றை   நம் சொந்தமாக்கி   வளமான வாழ்வு வாழ்வோமாக .

மனிதனின் உடல்கள் 3 .


மனிதனின் உடல்கள்   3 .
அவை-
1. நம் கண்களால் பார்க்கும் சரீரம்
2. நம் உணர்வால் அறியும் ஒளி உடல்
ஆரா,பிராண உடல் என்றும் சொல்லுவார்கள்.
3. நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணமான மனம்.

மனிதன் தான் அனுபவிக்கும் அனைத்து கஷ்டங்களுக்கும் ,நோய்களுக்கும் தன் சரீரமே காரணம் என்று நம்பி கண்களால் பார்த்து விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளையே நாடி ஓய்ந்து கவலைக்குள்ளாகிறான். பல வியாதிகள் மனதிலிரிந்து ஆரம்பிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை உளவழி உடல் நோய்கள்-psychosomatic disorders என்று பெயரிட்டுள்ளனர்.
இவற்றை மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. மாத்திரை,மருந்து,ஊசி,அறுவை சிகிச்சை,மசாஜ்,எண்ணை குளியல்,மண் சிகிச்சை,வர்மா ,தொடு சிகிச்சை,அக்கு பங்சர், ஹீலிங், உளவியல் சிகிச்சை ஆலோசனை போன்ற பல முறைகளை தனித்தனியே செய்து பலன் கிடைக்காமல் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தானே மருத்துவர் ஆகியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் வாழும் அன்பர் கோடி.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று யார் எதை சொன்னாலும் ஒரு கை பார்த்து விட மனம் தயார் .இந்த ஒரு பிறவியில் இனிமையாக வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது?
அந்த ஆசை தீர இன்று ஒரு வழி சொல்கிறேன்.
முதலில் உங்கள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது என்று ஆராய்ந்து உணருங்கள்.
1.   சரீர நோய்கள் -
காய்ச்சல்,பேதி,வாந்தி ,காயம் கட்டி போன்றவை சரீரத்தில் ஆரம்பிக்கும் நோய்கள்.இவற்றை நல்ல மருத்துவரிடம் காட்டி விரைவில் குணம் பெரலாம்.


2.   பிராண உடல் நோய்கள்-
பிராண உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது .
சூட்சும அணுக்களால் ஆனது . 
பிரபஞ்ச சக்தி என்னும் சக்தி குமிழ்கள் நாம் உட்கொள்ளும் உணவு, தண்ணீர் ,பிராண வாயு இவற்றுடன் சேர்ந்து நம் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாகின்றது .இதை பிராண சக்தி என்றும் கூறுவர் .இந்த சக்தியை உடலுக்கு அதிகம் எடுக்கும் முறையான பயிற்சியாக பிரணயாமம் கடைபிடிக்கப்படுகிறது .இது பல நோய்களுக்கும் ,மன அழுத்தம் நிங்கவும் உதவுவதை நம்மில்   பலர் அனுபவித்திருக்கிறோம் .  
இந்த சக்தியை நம் உடலுக்கு எடுத்துக்கொடுக்கும் வேலையை சக்கரங்களும் ஒளி உடலும் செய்கின்றன .நலமுடன் நம் உடலும் மனமும் இயங்க ஒளி உடலின் ஆரோக்கியம்  அவசியம் என்பது இனி நமக்கு புரியும் .      
சக்கரங்கள் ,நாடிகள் ஆரா இவற்றில் உண்டாகும் சக்தி மண்டல மாற்றத்தால் வரும் நோய்கள். தலைவலி, அடிக்கடி வயிறு பிரட்டி மலம் கழிப்பது ,வாந்தி,கால் எரிச்சல் ,தலை சுற்றல் ,தூக்கமின்மை ,பயம் ,கண் எரிச்சல் ,தொண்டை வலி ,தொண்டை வரட்சி ,படபப்பு ,ரத்தக் கொதிப்பு, தலை நடுக்கம் ,ஆண்மை குறைவு , பெண்களின் செக்ஸ் குறைபாடுகள் ,குழந்தை இன்மை ,விந்தணு குறைபாடு ,அடிக்கடி கரு கலைதல் , திடிரென்று பேச இயலாமை ,நடுக்கம் போன்ற நோய்கள் வர சக்கரங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணம் .இவற்றை மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது .இந்த நோய்கள் நாள்பட இருந்தால் அவை  சரீர உடலிலும் நிரந்தர நோய்களுக்கான மாற்றத்தை உண்டாக்கும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே முறையான பிராணிக் ஹீலிங் சிகிச்சை முலம் குணப்படுத்தலாம் .  மற்ற எனர்ஜி சிகிச்சைகளான அக்குபங்க்சர் ,வர்மா ,யோகா ,பிராணயாமா  போன்றவை ஓரளவுக்கு நலம் கொடுக்கும்.
ஒளி உடலில்   எந்த அளவு பாதிப்பு உண்டு என்று கண்டு பிடிக்க கிர்லியன் kirlian  போட்டோ உதவும் .சக்கரங்கள் ,உறுப்புகள் ,மண்டலங்கள் எந்த அளவு சக்தி தேக்கி வைத்திருக்கின்றன என்பதும் எந்த அளவு சக்தியை உபயோகிக்கின்றன என்பதும் இந்த பரிசோதனையில் தெரியும் .இந்த டெஸ்ட் ஒரு health horoscope -என்னும் உடல் நலத்திற்கான ஜாதகம் என்றே சொல்லலாம் .ஒவ்வருவரும் இந்த டெஸ்ட் எடுத்து தன் உடல் சக்தி சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்வது நல்லது .    
இந்த எனர்ஜி உடல் சக்கரங்கள் இவற்றை நம் முன்னோர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்    என்பதை பின்வரும் பேச்சு வழக்கைக் கொண்டு அறியலாம் .
1 . இவன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறான் -   மூலாதாரா சக்கரம்  கட்டுப்பாடில்லாமல் இயங்குகிறது என்று அர்த்தம் .
2. வயற்றில் பட்டம் பூச்சி பறக்கிறது .வயிறு பிரட்டுகிறது .இவை வயிற்றுப்பகுதியில் உள்ள சக்கரங்கள் பயத்தில் அதிகம் சுழல்வதை உணர்த்துகிறது.
3 .இவன் தலை  கனம் பிடித்து திரிகிறான்  .ஒருவருடைய கர்வத்தால் அவருடைய தலை சக்கரங்கள் அதிகம் சக்தியை தேக்கி வைத்து  அந்த நபரை மற்றவர்களை மதித்து   புரிந்து அன்புடன் நடந்து கொல்லாத நிலையில் வாழ வைப்பது.   
4. குழந்தை நலங்கி விட்டது .வாந்தி ,பேதி,காரணமில்லாமல் வரும் காய்ச்சல் ,பயந்த மாதிரி வெறித்து பார்க்கும் குணம் ,உடல் எடை மடமடவென குறைவது ,துங்காமல் அழுதுகொண்டே இருப்பது ,எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சல் ,சளி ,எந்த டெஸ்ட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாத உடல் நலக்குறைவு ,போன்றவை இந்த ஒளி உடல் மாற்றத்தால் வருபவை .      உடனே அதற்கு சிறகடித்து ,திருநீர் பிடித்து ,மந்திரித்து கயிறு கட்டவேண்டும் .இல்லை என்றால் அது நோயாக உடலில் பற்றிக்கொள்ளும் . குழந்தை   பிறந்த வீடு  , கரு கலைந்த பெண் உள்ள வீடு ,மரணம் நிகழ்ந்த  வீடு ,நோய் கண்ட  ஒருவர் உள்ள வீடு ,மயானம் ,மருத்துவமனை , என்று பல இடங்களுக்கு குழந்தைகளை  கொண்டு செல்வதை பழங்காலத்தில் தவிர்க்க சொன்னது நினைவிருக்கும். இவை எல்லாமே இளம் குழந்தையின் உடலில் உள்ள சக்தி மண்டலம் எளிதில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலேயே கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு முறைகள் .
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இன்று முதல் நீங்களும் உங்கள் குடும்ப வழக்கில் உள்ள வாக்குகளை ஆராய்ந்தது மகிழலாம் .ஒரு சொல் விளையாட்டாக இதை மற்றவர்களுடன் பகிர்ந்தது புரிய வைக்கலாம் .     
இந்த நோய்களுக்கு பிராணிக் ஹீலிங் முலம் நிரந்தர ஆரோக்கியத்தை பெறலாம்.ஒளி உடல் ,சக்கரங்கள் இவற்றில் ஏற்படும் நோய்களுக்கு பிராணிக் ஹிலிங் விஞ்ஞான அடிப்படியில் ஆராய்ந்தது முறையாக எந்த ரகசியமும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று .


3.      மனம்
மனம் என்னும் உணர்வு உடல் தரும்  உணர்வு நிலை நாம் அனைவரும் உணர்ந்ததே.
மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
ஆனால் இந்த மனம் என்பது நம்முடைய உடல்களில் பெரியது என்பது நாம் அறியாத ஒன்று .மனம் என்னும் உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது  . சூட்சும அணுக்களால் ஆனது .
ஆனால் முளை  என்ற உறுப்பு இதற்கு தொடர்புடையது என்பது நமக்கு தெரியும் . இந்த முளை நம் மனதின் இருப்பிடம் என்றும்     மனம் என்னும் உடலின் hardware என்று தற்போது நினைத்துக்கொள்ளலாம் .மனம் என்பது ஆன்மாவின் நுண்ணிய கருவி என்று பிராணிக் ஹீலிங் மாஸ்டர் சோவா கோக் சூயி தன் புத்தகங்களில் எழுதியுள்ளார் .இந்த மனம் வயிற்ருப்பகுதியில் மையம் கொண்டு 12  அடி  விட்டம் கொண்ட பந்து போல நம்மை சூழ்ந்து உள்ளது.  
எண்ணங்கள் மனதில் உருவாகும் சக்தி வடிவங்கள் .மனம் 2  பகுதிகளாக பிரிக்கப்படுகிறது .மன  ஆராய்ச்சியாளர்கள் அதை உணர்வு மனம் ,ஆழ்      உணர்வு மனம்  என்று சொல்கின்றனர் .10 % உணர்வு மனம் ,90 % ஆழ் உணர்வு மனம்  .ஆழ் மனதில் தேங்கி இருக்கும் பல எண்ணங்கள் ஒருவருடைய குணமாகவும், ஆற்றலாகவும் ,நோயாகவும் ,பலமாகவும் ,பலவீனமாகவும் வெளிப்படும் . இதன்  தன்மை  கொண்டே ஒருவருடைய  வாழ்க்கை  நிர்ணயிக்கப்படுகிறது  என்பது உண்மை . 
மனதில் உண்டாகும் எதிர்மறையான எண்ணங்கள் நம் ஒளி உடலில் சக்தி எடுக்கும் தன்மையை மாற்றி விடுகின்றன . சக்கரங்கள் முலம்   உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் எனர்ஜி  குறைந்து    நோய் உருவாக காரணமாய் அமைகிறது    .      
சொரியாசிஸ் ,அரிப்பு ,ஆஸ்த்துமா ,தண்ணீர் பயம் ,ஆகாய விமானத்தில் பறக்க பயம் ,உயரமான இடத்தல் இருந்து கீழே பார்க்க பயம்,பாம்பு ,நாய் ,பூனை,புழு ,இரத்தம் பார்க்க பயம் ,தனியாக  அறையில்  இருக்க பயம் ,,மரண பயம் இப்படி பலவித காரணமற்ற பயங்கள்.
அதிக உடல் பருமன் உண்டாக ,ஏதோ நோய் இருப்பது போன்று நினைத்து பல மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுவது ,தூக்கமின்மை ,குழந்தையிமை,ஆண்மை இல்லாமை ,உடலுறவு செய்ய முடியாது என்று நினைப்பது, குழந்தை பிறக்காது என்று கவலை பட்டு மன அழுத்தம் அடைவது ,யாரோ தன்னை பார்ப்பது, பேசுவது , குறை சொல்வது, திட்டுவது போல உணர்வது போன்ற பல இந்த மனதில் உண்டாகும் பாதிப்பான ,இணக்கமற்ற எண்ணங்களால் உண்டாகின்றன .              
   . மனதில் உருவாகும் எதிர்மறையான   எண்ணங்கள் குறைய  யோகா ,தியானம் போன்றவை உதவும். இதுவே மனதில் ஆழமாக பதிந்து மன அழுத்தத்தை உருவாக்கும் பொழுது பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோதெரபி சிகிச்சைகள் உதவியாக இருக்கும். 
இப்படி ஆராயும் பொழுது நம் வாழ்வில் உண்டாகும் எந்த தவிப்புக்கும்,நோய்க்கும்,பலவீனத்துக்கும் ,பத்துக்கும்,சுகமின்மைக்கும் ,கவலைக்கும்  ,   படிப்பு,  ஜாபகம் , மனப்பாடம்  செய்யும்  திறமை, தைரியமாக செயல்கள் செய்ய , உறவுகள் மேம்பட ,சகஜமாக வாழ ,கூச்சமின்றி  மக்களுடன் பழக  இப்படி எதற்குமே ,எல்லாவற்றிற்குமே தீர்வு இந்த மனம் சார்ந்த்த சிகிச்சைகள் .       
இப்படி மனிதனின் ஆரோகியத்துக்கு 3 உடல்களின் தன்மையை ஆராய்ந்தது தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் .இதை விடுத்து அனைத்துக்கும்  ஒரு   முறையான   மருத்துவம் சிறப்பு என்று நினைத்து நாட்களை வீணாக்கி உடல் நலனை தொலைத்து நோயில் மடிவதை   இனி கை  விட வேண்டும் .நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான சூட்சும சிகிச்சைகள் , ஆன்மிக அறிவு இவற்றை   நம் சொந்தமாக்கி   வளமான வாழ்வு வாழ்வோமாக . 
                       ,  

Friday, August 17, 2012

ஹிப்னாடிசம் பற்றி !

ஹிப்னாடிசம் பற்றி ,மன ஆரோக்கியத்துக்கு சுய சிகிச்சை பயிர்ச்சி,மன அமைதி,குழந்தை பேறு பெற ஹிப்னோ சிகிச்சை,தலை சுற்றல்,தலை வலி,சோர்வு,பயம்,stress,unhappy mind,memory ,sex fitness,sex problems,sex potency,strong in sex,manly,macho,love failure,body fitness,health fitness,

 ஹிப்னாடிசம் treatment-
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),
SEXOLOGIST,
Master Hypnotist
07708485038 
Certified Adolescent Health Counsellor,
Advanced Pranic Healer and Pranic Psychotherapist.
www.coimbatoresexologist.com

 
நான்  மிக ஆர்வமாக படித்து கொண்டு இருந்தது ஹிப்னாடிசம் சம்பந்தமான ஒன்று...அன்று எப்போதும் போல அவள் வந்தாள்..."என்ன படிக்கிறே நான் வருவது கூட தெரியாமல்" என்றாள்..    நான் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை அவளிடம் காட்டி "ஹிப்னாடிசம் சம்பந்தமாக" என்றேன்..  "ஐயோ இது சம்பந்தமாக ஏன் நீ படிக்கிறே!!!!"..என்றாள் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு..    "ஏன் இதில் என்ன இருக்கின்றது" என்றேன்..அதற்கு அவள் "இது தெரிந்தால் மற்றவர்களை மயக்கி தன வயப்படுதிவிடலாம் என்று நான் எங்கோ படித்து இருக்கிறேன்" என்றாள்..


      அதற்கு நான் "அப்படி ஒன்றும் இல்லை அது எல்லாம் ஹிப்னாடிசம் பற்றி தவறான கருத்துகள்..நீ படத்தில் பார்த்திருப்பே.. அதையெல்லாம் நம்பாதே"..என்றேன்..அதற்கு அவள் "சரி நான் அதை நம்பவில்லை ..நீ சொல் உண்மையில் அது அப்படி இல்லையா என்ன? என்றாள்...    "ஆமாம்"என்றேன்..அதற்கு அவள் "அப்படியென்றால் அதில் அப்படி என்னதான்    இருக்கிறது" எனறாள்..    "ஹிப்னாடிசம் என்பது நீ நினைப்பது போல ஒருவரை அப்படியே மயக்கி தூங்க வைத்து அவரை தன்வயப்படுதுவது எல்லாம் இல்லை"...     உனக்கு ஒன்னு தெரியுமா உன் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இன்றி யாராலும் உன்னை ஹிப்னாடிசைய்ஸ் செய்ய முடியாது..எப்போது உன் உள்மனது முழுமையாக ஹிப்னாடிசம் செய்பவரோடு ஒத்துபோகின்றதோ அப்போதுதான்..அவர் உன்னை ஹிப்நோசிஸ் செய்ய முடியும்..என்றேன்..     நம்மில் மனம்(conscious mind),மற்றும் ஆழ்நிலைமனம்(sub conscious mind)  என்ற இரண்டு இருக்கின்றது..அது பற்றி உனக்கு தெரியுமா என்றேன்....அதற்கு அவள்..அதிகமாக தெரியாது என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்..அதுவும் அழகாய்த்தான் இருந்தது....     சரி இப்போது ஒரு விமானத்தை ஒரு விமானி இயக்குகின்றார் என்று வைத்து கொள்..அவர்தான் நம் மனது...அவர் என்ன செய்வார் சாதாரண வேலைகளை  மட்டுமே..அதாவது அவருக்கு கொடுக்கப்பட்ட தடத்தில் சரியாக விமானத்தை செலுத்துவது, விமானத்தில் ஏற்ப்படும் மாற்றங்களை கண்டுகொள்வது போன்ற வேலைகள்.. ....எப்படி நாம் அன்றாடம் வேலைகளை செய்கின்றோம் அது போல..     ஆனால் ஆழ்மனது என்பது அந்த விமானிக்கு தரையில் இருந்து கட்டளைகள் கொடுப்பவர்...மேல இருக்கும் விமானி கிழே இருப்பவர் என்ன கட்டளைகள் கொடுக்கின்றரோ அதைத்தான் செயல்படுத்துவார்...     அதே போலத்தான் நம்மில நடக்கும்..அன்றாட வேலைகளை நமது மனது பார்த்து கொள்ளும்..ஆனால் நம் மனது செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கு பின்னால் நமது ஆழ் மனதின் செயல்பாடு கண்டிப்பாக இருக்கும்...     அப்படி நம் மனதில் ஏற்ப்படும் சில சிக்கல்களை,பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேராக நம் மனதிற்கு கட்டளைகள் கொடுக்கும் ஆழ் மனதோடு பேசி அதற்கு சில கட்டளைகள் கொடுத்து அதான் மூலம் நமது மனதில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்வதுதான் ஹிப்னாடிசம்...இது பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றது...முக்கியமாக மருத்துவத்திற்கு,மன நலமுடன் நாம் வாழ்வதற்கு ...     "இப்போ புரிகின்றதா ஹிப்னாடிசம் என்றால் என்ன" என்றேன்..அதற்கு அவள் "புரிகின்றது "என்று தலையாட்டினாள்...இப்போதும் அது அழகாய்த்தான் இருந்தது...     "சரி அதுக்கு எதுக்கு நம்மை தூங்க வைக்கவேண்டும்' என்றாள்..அதற்கு நான் "உனக்கு யார் சொன்னா ஹிப்னாடிசம் த்தில் தூங்க வைப்பார்கள் என்று..அதெல்லாம் பொய் புரட்டு வேலை'...     ஹிப்னாடிசம் செய்யும் போது நீ நினைவோடுதான் இருப்பாய்..உன் மனது செயல் இழந்து இருக்கும்..அதே நேரத்தில் உன் ஆழ் மனது செயலில் இருக்கும் என்றேன்..

இப்படி ஹிப்னாடிசம் பற்றி அழகாக எழுதிய கணேசுக்கு நன்றி